Monday, November 12, 2012
Thursday, November 08, 2012
GREETINGS FOR MEMBERS & READERS
Thursday, November 08, 2012
Unknown
HAPPY DEEPAVALI TO MEMBERS & READERS
நாகரீகம்,கல்வி,பொருளாதாரம்,அறிவியல் அறிவு என பல வளர்ந்து இருந்தாலும் மனித சமுதாயம் இன்றும்
மதித்து வருவது அவரவரின் மதம் ,கலாச்சாரம் மற்றும் மண் சார்ந்த
நம்பிக்கைகளும் பண்டிகைகளுமே.அவற்றில் தீபாவளிப் பண்டிகையும் ஓன்று. நாத்திக மக்கள் அதை மனம் சார்ந்த
பண்டிகையாகக் கொண்டாடுவர் ஆன்மீக மக்கள்
அதை மதம் சார்ந்த பண்டிகையாகக்
கொண்டாடுவர் .இருப்பினும் பண்டிகை என்றாலே குதூகலமும்
கொண்டாட்டமும்,மனதின் உற்சாகம்,சந்தோஷம் இவைகளை மேம்படுத்தவும் மட்டும் தான்
இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து
போக வேண்டுமென்றும்,
அக அழுக்கு இல்லாமல்
போக வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள்.
நரகாசுரன் கண்ணனால் ஆட் கொள்ளப்பட்டபோது தன்னைப்போல் எல்லோரும் கண்ணன் திருவடிகளை
அடையவேண்டுமென்று விரும்பினான். அனால் நம்மவரில் பெரும்பான்மையோர் அன்றைய
தினத்தில்தான் குடியும் புலாலும் உண்டு அசுரர்களாக மாறி விடுகிறார்கள். அந்த நிலை
மாறி அகத்தில் விளக்கு ஏற்றுவோமாக.
நன்றி மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்
Wednesday, August 01, 2012
ALL ARE FRIENDS
Wednesday, August 01, 2012
Unknown
Friendship is Sacred Virtue
We all need it
Thanks for beings my friend !
Wish you all happiness and prosperity
Love you All
எல்லாரும் நம் நண்பரே!
இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும்' என வணக்கம் சொல்வார்கள்.
இதன் பொருள், "அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது உண்டாகட்டும்' என்பதாகும்.
உலகம் பகை என்ற கட்டடத்தைப் பலமாகக் கட்டிக் கொண்டிருக்கிறது.
ஒருவரது முன்னேற்றம், மற்றொருவருக்கு சகிக்கவில்லை. இதன் காரணமாக, போட்டி, பொறாமை அதிகரித்து விட்டது. இதை தவிர்க்க வேண்டும் என்கிறது இஸ்லாம். "அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்வது தான் இதற்கு ஒரே தீர்வு. ஆம்! பகை உணர்வுடன் நடந்து கொள்ளும் ஒருவரை பார்க்கும் போதெல்லாம் ஒருவர், தொடர்ந்து "அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவரது மனம் மாறி விடும். அவர் பகையை மனதில் நினைக்காமல், அல்லாஹ்வின் அருளை நமக்காக வேண்டுகிறாரே என்ற எண்ணத்தில், நண்பராகி விடுவார். பகைவரையும் நண்பராக்கும் வார்த்தையே "அஸ்ஸலாமு அலைக்கும்'.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதுபற்றி கூறும் போது, "ஸலாத்தின் மூலம் இம்மை மறுமை நன்மைகளைக் காணலாம். மக்களிடையே அன்பு பரவும். எதிரிகள் தங்கள் பகையை மறந்து இணைவார்கள்,'' என்கிறார்கள்.
ஒருவர் நபிகளாரிடம், "இஸ்லாத்தில் சிறந்தது எது ?' என கேட்டார்.அதற்கு நாயகம், "பசித்தவருக்கு உணவளிப்பதும், தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் ஸலாம் சொல்வதும் ஆகும்," என்றார்கள்.
நபி ஆதம் (அலை) அவர்களுக்கும், அவர்களது உம்மத்தினர்களுக்கும் அல்லாஹ் இதை கடமையாக்கி இருக்கிறான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கு, ஸலாம் சொல்லும் முறையையும் கற்றுக் கொடுத்துள்ளான். இதிலிருந்து ஸலாத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - கண்ணதாசன்



